ஆப்நகரம்

'1 மணி நேரம் அட்ஐஸ்ட் பண்ணுவியாமா'? புகார் கொடுக்க பெண் வந்தால் இப்படித்தானா?

ஈரோடு அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைக்கும் காவலர் ஆடியோ வைரலாகியுள்ளது.

Samayam Tamil 30 Jul 2021, 3:45 pm
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த நாகரஞ்சினி நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவனை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தையை காணவில்லை எனக்கூறி சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Samayam Tamil சிவகுமார் நாகரஞ்சனி


அப்போது, அந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ள சிவகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில் குழந்தையை நாகரஞ்சினியின் கணவர் வீட்டில் இருப்பதாக தெரிய வந்தது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் குழந்தையை கணவர் எப்படி கடத்தியிருக்கலாம் என்றுகூறி அவர் மீது மேலும் ஒரு புகாரை கொடுத்துள்ளார் நாகரஞ்சினி.

இந்த புகார்கள் காரணமாக நாகரஞ்சினி அடிக்கடி காவல் நிலையத்துக்கு சென்று வர தலைமை காவலருடன் பழக்கம் நீடித்துள்ளது. இதனிடையே, நாகரஞ்சினிக்கு ரூ. 3 லட்சம் வரை சிவகுமார் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுப்பதில் நாகரஞ்சனி இழுபறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு நாகரஞ்சினியை தொடர்பு கொண்ட சிவகுமார், '' மாட்டு ஆஸ்பத்திரி பின்னாடி ஒரு வீடு இருக்கு. அங்கு ஒரு அம்மா வசித்து வருகிறார். நீங்கள் அங்கு வந்தால் அந்த அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ஒரு மணி நேரம் என்னுடன் தனிமையில் இருங்கள். நீங்கள் அப்படி செய்தால் உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்வேன்'' என்று தலைமை காவலர் பேசியுள்ளார்.

வேலைக்காரி, அண்ணி, நண்பனின் மனைவி... கணவனின் இம்சையை அம்பலப்படுத்தும் பெண்

அந்த ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ள நாகரஞ்சனி, புகார் கொடுக்க வந்த என்னை உல்லாசத்துக்கு அழைக்கிறார் என்று கூறி குற்றஞ்சாட்டியுள்ளார். அது தொடர்பாக விசாரித்ததில், அந்த ஆடியோ குறித்து வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டதாகவும். அது என்னுடைய குரல் இல்லை என்றும் குரல் ஆய்வுக்கு நான் தயாராக இருப்பதாகவும் தலைமை காவலர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு குறித்து உண்மை தன்மையை ஆராய மாவட்ட டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி