ஆப்நகரம்

வீதியில் வீசப்பட்ட கவச உடைகள், தென்காசியில் நடந்த பொறுப்பற்ற செயல்...

தென்காசி அருகே கொரோனா பரிசோனை செய்ய வந்த சுகாதார ஊழியர்கள் கவச உடைகளை வீதியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 3:58 pm
தென்காசி மாவட்டம் பூசையாத்தாள்பட்டி அருகே உள்ள கிராமத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருந்தது. அதற்காக, அங்கு சென்ற சுகாதார குழுவினர் கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்.
Samayam Tamil ppe kit in street


அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் தங்கள் உடுத்தியிருந்த பாதுகாப்பு கவச உடை, கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அப்பகுதியின் வீதியிலேயே வீசி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்தவர்கள், பாதுகாப்பு கவசங்களை ஓரிடத்தில் போட்டு எரித்தனர். கொரோனா காலக்கட்டத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து வரும் சுகாதார பணியாளர்கள் சிலர் பொறுப்பற்று நடந்துகொள்ளும் சம்பவம் விமர்சனத்தை உண்டாகியுள்ளது.

பாசம் குறைந்ததால் கொலையாளியான 5 வயது சிறுமி..! அதிர்ச்சி தந்த சம்பவம்

முன்னதாக சென்னையில் இதேபோல, சுகாதார பணியாளர்கள் சாலையில் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கையுறைகளை விட்டு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி