ஆப்நகரம்

ஓசூர் நகை கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு..!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நகை கொள்ளையில் கைதான 7 கொள்ளையர்களை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது.

Samayam Tamil 27 Jan 2021, 6:00 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் இயங்கி வந்த முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி 40 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil robbers


குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் கங்காதர் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி காலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் ஐதராபாத்தில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 7 பேரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களிடம் இருந்து, ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களை தமிழக காவல்துறையினர் ஓசூருக்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இரு மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியை ஆடல், பாடல்..! போலீஸ் குழப்பம்

அப்போது, கொள்ளையர்களை 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதிக்க கோரினர். அதன்படி, கொள்ளையர்கள் 7 பேரையும் 12 நாட்கள் இல்லாமல் 10 நாட்களுக்கு கஸ்டடியில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி