ஆப்நகரம்

தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..! கோர கொலையில் திடுக்கிடும் பின்னணி..

ஒசூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இருவரை கொலை செய்ய முக்கிய காரணமானவர் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிப்பு.

Samayam Tamil 18 Feb 2020, 4:10 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராம மூர்த்தி (தேடப்படும் குற்றவாளி) . தொழிலதிபரான இவர் அப்பகுதியில் முக்கிய பிரமுகராக இருந்து வருபவர். அதே சமயம் ராமமூர்த்தி மனைவியின் சகோதரர் ஆனந்த் பாபு தொழிலில் நல்ல லாபத்தை கண்டு வந்துள்ளார்.
Samayam Tamil தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


இதனால் ராமமூர்த்திக்கு ஆனந்த்பாபு மீது பொறாமை ஏற்பட்டது. இந்த நிலையில் தொழிலில் வீழ்த்தமுடியாததால் ஆனந்த் பாபுவை தீர்த்துக்கட்ட ராம மூர்த்தி முடிவு செய்தார். இதனால் மதுரை கூலிப்படையை ஏவி ஆனந்த் பாபு காரின் மீது பெட்ரோல் குண்டுவீசி விபத்து போல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.


ஆண் நண்பருடன் காதலர் தினத்தை கொண்டாடிய மனைவி.. அடித்துக் கொலை செய்த கணவன்...

திட்டத்தின்படி சம்பவத்தன்று ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் கார் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசியதில் டிரைவர் முரளி, ஆனந்த்பாபுவின் மனைவி நீலிமா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்று ஆனந்த்பாபு காரில் வராததால் உயிர் தப்பினார்.

இதுகுறித்த வழக்கில் உத்தனப்பள்ளி போலிசார் 13 பேரை கைது செய்து அதில் 8 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தனர். ஆனால் இந்த கொலைக்கு முக்கிய காரணமான முதல் குற்றவாளி ராம மூர்த்தி என்பவர் இதுவரை கைது செய்யப்பட முடியவில்லை என்பதால் போலீசார் ராமமூர்த்தியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி