ஆப்நகரம்

பழைய வீடு இடிந்தது விழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நாத்தி வருகின்றனர்.

Samayam Tamil 25 May 2019, 4:17 pm
வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நாத்தி வருகின்றனர்.
Samayam Tamil ஆம்பூர் அருகே வீடு இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
ஆம்பூர் அருகே வீடு இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை


ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அருண். இவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பழுதடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்ததது.

இதில் பலத்த காயமடைந்த அருண் மற்றும் அவரது தயார் இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

அப்போது செல்லும் வழியிலேயே அருண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது இந்த மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி