ஆப்நகரம்

விளையாட்டாக நெற்றியில் வைத்து சுட்டேன், வெடிக்குமென தெரியாது - இளைஞர் விஜய்

சென்னை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த விஜய் என்ற வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Samayam Tamil 6 Nov 2019, 2:14 pm
சென்னை வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அவரது நபர் விஜய் என்பவரது வீட்டிற்கு முகேஷ் சென்றார்.
Samayam Tamil சென்னை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை



அப்போது இருவரும் வீடியோகேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. வீட்டிற்கு வெளியே விஜயின் தம்பியான உதயா என்பவர் இருந்துள்ளார். அந்த கன நேரத்தில் வீட்டிற்கு உள்ளே துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து, உதயா வீற்றிக்குள் வந்த பார்த்ததில், முகேஷ் நெற்றி பகுதியை துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் துடித்துள்ளார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாகூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னதாகவே முகேஷ் இறந்து விட்டதாக தெரிகிறது.

மாணவரை சுட்ட வழக்கு: விஜய் நீதிமன்றத்தில் சரண்!

சம்பவத்தை குறித்து துப்பாக்கியால் சுட்ட விஜய் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஜய் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீடியோ கேம் விளையாடி கொண்டு வந்ததாகவும், துப்பாக்கியை விளையாட்டாக நெற்றியில் வைத்து அழுத்தும் போது வெடித்து விட்டதாகவும் கூறினார்.

அயன் பட பாணியில் கடத்தல்: 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

எனினும் துப்பாக்கி அவருக்கு எடுத்து வந்ததென்ற தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்ற காவலில் சிறையிலிருக்கும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி