ஆப்நகரம்

டூ வீலரில் 100 மது பாட்டில்கள்- வசமாக சிக்கிக் கொண்ட பெண்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

போலீசார் நடத்திய விசாரணையில் பெண் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்கள் சிக்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 8:27 pm
சென்னையை சேர்ந்த போலீசாருக்கு உளவுத் துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, புளியந்தோப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Liquor


அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவரது வாகனத்தில் இருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கல்வி வளாகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அலப்பறை.! வீடியோவால் சிக்கிய சேகர்கள்

இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அப்பெண் கவிதா(34) என்பது, புளியந்தோப்பு அருகே உள்ள கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் பெரம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 கொடுத்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளார். இவற்றை கவிதாவும், அவரது தாயாரும் சேர்ந்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

ஏ.டி.எம் கார்டை திருடி, பணம் எடுத்து போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்

இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கவிதாவின் தந்தை துரை, கஞ்சா விற்பனை, கொலை உள்ளிட்டவை தொடர்பாக 20 வழக்குகளில் தொடர்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இரு ரவுடிகள் கைது!

அடுத்த செய்தி