ஆப்நகரம்

கோவையில் பதற்ற நிலை: முன்னெச்சரிக்கையாக 127 பேர் கைது..!

கோவையில் தொடர்ந்து வரும் மோதல் சம்பவத்தை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 127 பேரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 12 Mar 2020, 8:20 pm
கோவையில் கடந்த சில நாட்களாகவே இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்று வரும் மோதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மாநகரம் முழுவதும் தொடர்ச்சியாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவையில் பதற்ற நிலை முன்னெச்சரிக்கையாக 127 பேர் கைது


இந்த நிலையில் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் கூறும்போது ; கோவை மாநகரில் கடந்த ஒரு வாரமாக நடைபெறும் சில மோதல் சம்பவங்களையடுத்து ஒரு தாக்குதல் வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். மற்ற இரு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.


அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளது.
நேற்று இரவு மட்டும் 127 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இன்றும் தொடர் வாகன சோதனை நடத்தப்படும். அனைத்து அமைப்புகளும் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும். அடுத்த ஒரு வார காலத்திற்கு கோவை நகரில் போராட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தபட்டுள்ளது.
நேற்று மாலை இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என தெரிவித்தார்.

லாக்கப்பில் டிக்டாக் செய்த குஜராத் புள்ளீங்கோ..! வச்சி செஞ்ச காவல்துறை...

கோவையில் இந்து, இஸ்லாம் சமூகத்தினரிடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பைச் சரி செய்ய காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பினை சேர்ந்த நபரை இரண்டு பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி