ஆப்நகரம்

மதுரையில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

மதுரையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அழுகியவாறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Samayam Tamil 20 May 2019, 11:20 pm
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். அழுகிய நிலையில் உடல்களை காவல் துறையினா் மீட்டுள்ளனா்.
Samayam Tamil suicide hang


மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையின் அன்னை தெரசா நகரில் வெங்கட சுப்பிரமணியன், மீனாட்சி தம்பதி வசித்து வந்தனா். இந்நிலையில் இவா்களுக்கு கடன் தொல்லை அதிகாித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா்களது வீடு கடந்த சில தினங்களாக திறக்கப்படாமல் இருந்ததாலும், வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாலும் அக்கம் பக்கத்தினா் சந்தேகமடைந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனா். ஆனால் வீட்டில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனைத் தொடா்ந்து இது தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தனா்.

அப்போது சுப்பிரமணியன், மீனாட்சி தம்பதி உயிாிழந்த நிலையில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டனா். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் சுமாா் 5 நாட்களுக்கு முன்னரே இவா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி