ஆப்நகரம்

போலீஸ் பொண்டாட்டிக்கா இந்த நிலைமை? செமயா மாட்டிக் கிட்ட கணவர்!

பெண் காவலரிடம் இப்படி நடந்து கொண்டதற்காக, அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Nov 2019, 12:56 pm
திருமணமான பெண்கள் தங்களது கணவன்மார்களால் அடித்து துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் காவல்துறையில் பணியாற்றி வரும் பெண்ணிற்கே இப்படியொரு நிலைமை என்றால் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.
Samayam Tamil Police


சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் உமா மகேஸ்வரி(37) என்ற காவலர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

இவரது கணவர் டில்லிபாபு(38), கடந்த 2003ஆம் ஆண்டு முதல் காவலர் பணியில் சேர்ந்த பணியாற்றி வந்தார். மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், சரியாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

திருச்சி: ரூ. ஒரு கோடியே 40 லட்சம் கொள்ளை போன வழக்கு புது அப்டேட்!

இதனால் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, பணியில் இருந்து நீக்கம் செய்து விட்டனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த சூழலில் டில்லிபாபுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த உமா மகேஸ்வரி மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். அடிக்கடி உமாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த 5 வயது சிறுமி அடித்து கொலை..! நெய்வேலியில் பரபரப்பு..

இதுபற்றி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உமா மகேஸ்வரி புகார் அளித்துள்ளார். இதையடுத்து டில்லிபாபு மற்றும் அவருடன் பழக்கத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் டில்லிபாபுவை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதேசமயம் ஸ்ரீதேவி தலைமறைவாக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி ‘பிகில்’கலவரம்: தொடரும் விஜய் ரசிகர்கள் மீதான கைது படலம்!

அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி