ஆப்நகரம்

வங்கியில் கொலை வெறி தாக்குதல்... நிலைகுலைந்த பெண்... அலறிய மதுரை மக்கள்

மதுரையில் வங்கிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய கொடூர கணவனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Mar 2022, 6:16 pm
மதுரையைச் சேர்ந்தவர்கள் பிரேமலதா - வெள்ளைச்சாமி தம்பதி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிரேமலதா மதுரையிலும், வெள்ளைச்சாமி மேட்டுப்பட்டியிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மனைவி பிரேமலதா கனரா வங்கிக்கு பணம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த வெள்ளைச்சாமி வங்கிக்குள் புகுந்து பிரேமலதாவை பின்புறமாக இருந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.
Samayam Tamil madurai crime news


இதனால் நிலைகுலைந்து விழுந்த பிரேமலதாவை வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் சேர்ந்து தொடர்ந்து வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை வங்கியில் இருந்தவர்கள் அலறி அடித்து பார்த்துக்கொண்டே செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பிரேமலாதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வெள்ளச்சாமி மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

ரகசிய வீடியோவால் அடுத்தடுத்து இரையான இளம்பெண்... 8 பேர் கைது... பொள்ளாச்சியை விட கொடூரம்..!

பட்டப்பகலில் வங்கியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், மனைவி மதுரையிலும் கணவர் வெள்ளைச்சாமி மேட்டுப்பட்டியில் வசித்து வந்துள்ளார். இன்று வங்கிக்கு பணம் செலுத்த பிரேமலதா வந்தபோது வெள்ளைச்சாமி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வராததால் இந்த கொலை முயற்சி நடந்ததா? வேறேதேனும் தொடர்பில் பிரேமலதா இருந்ததால் வெள்ளைச்சாமி சண்டை போட்டு மனைவியை பழிவாங்க வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி