ஆப்நகரம்

நண்பர்களின் மனைவியை அடைய, தன் மனைவியை தாரைவார்க்க முயற்சித்த கணவன்...

அகமதாபாத் அருகே தனது கணவர் ஆன் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Aug 2020, 10:14 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முன்னதாக தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும் சுயமாக ஜவுளி நடத்தி வருவதாகவும் கூறித்தான் பெண் தேடி திருமணம் முடித்துள்ளார்கள். அப்போது பெண் வீட்டினர் 50 சவரன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil file pic


இந்நிலையில், திருமணம் முடிந்து 6 மாதத்திற்கு பிறகு பெண் வீட்டில் ஒரு காரையும், கூடுதலாக வரதட்சிணையையும் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் சாகர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறிது காலம் அப்படியே நகர, சாகர் ஒரு எம்பிஏ பட்டதாரி இல்லை என்றும் வரதட்சிணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கொண்டு தொழில் தொடங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதையும் அவரது மனைவிக்கு தெரிய வந்தது.

தினமும் குடி, சூது என்ற போதை பழக்கத்துக்கு அடிமையாகி பணத்தை செலவழித்திருப்பதும் தெரிந்தது. இதை தட்டி கேட்ட மனைவியை சாகர், அடித்து உதைத்ததோடு, தனது நெருங்கிய நண்பர்களோடு நெருக்கமாக இருக்கவும் கூறியுள்ளார். அதனால், தானும் நண்பர்களின் மனைவிகளோடு நெருக்கமாக இருக்க முடியும் என ஆசைப்பட்டுள்ளார்.

அதற்கு மறுத்த மனைவியை அவர் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். சிறிது காலம் அம்மா வீட்டில் இருந்த பெண், தான் கொடுத்த வரதட்சிணையை திருப்பி கொடுக்கவும், சாகர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரிக்க சென்ற போலீசாருக்கு சாகர் ஏற்கெனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

கோவையில் தைரியமாக இரவில் நடமாடும் டவுசர் கொள்ளையர்கள்..!

இந்நிலையில், சாகரின் பெற்றோரிடமும், அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு தப்பிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

அடுத்த செய்தி