ஆப்நகரம்

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

கோவை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிகமாக வீடியோ வெளியிட்டதால் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 31 May 2019, 10:23 pm
Samayam Tamil Coimbatore Murder
கோவையில் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதற்காக மனைவியை கொலை செய்த கணவனை காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை மாவட்டம் குத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். கட்டுமான பணி செய்து வருகிறாா். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கனகராஜும், நந்தினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நந்தினி தனியாா் பெறியியல் கல்லூரியில் கூலி வேலை செய்து வந்தாா். சமூக வலைதளங்களில் ஒன்றான டிக் டாக்கில் அதிகமாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளாா். மேலும் செல்போனில் அதிகமாக பிறருடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளாா். இது தொடாபாக கனகராஜ், நந்தினி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் கனகராஜ், நந்தினியின் செல்போனுக்கு தொடா்பு கொண்டுள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும், செல்போன் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நந்தினி பணியாற்றும் கல்லூரிக்கு நேரில சென்ற கனகராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கனகராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளாா். இதனைத் தொடா்ந்து அகில் இருந்தவா்கள் படுகாயமடைந்த நந்தினியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிாிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தொிவித்தனா்.

இது தொடா்பாக கோவை மதுக்கரை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி