ஆப்நகரம்

குடும்ப பாரத்தை சுமந்த மனைவியை பல இடங்களில் வெட்டி கொன்ற கணவன்..!

கன்னியாகுமரியில் குடிக்க பணம் தரமறுத்த மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன் பாறசாலை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Samayam Tamil 17 Apr 2021, 6:08 pm
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையான பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. கூலி தொழிலாளியான இவருக்கு மீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான ஷாஜி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
Samayam Tamil accused


மீனா பலரிடம் கடன் வாங்கி பாறசாலையை அடுத்த குறங்குட்டி பகுதியில் வீடு கட்டி வந்தார். அதற்காக பலரிடம் கடன் வாக்கி வைத்திருந்த பணத்தையும், ஷாஜி சீட்டு விளையாடியும் மது குடித்தும் அழித்துள்ளார். இந்நிலையில்,மீண்டும் மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு தகறாறு செய்துள்ளார். ஆனால், மீனா பணம் தராதால் ஆத்திரமடைந்த ஷாஜி மீனாவை கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மீனா உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியை செய்துவிட்டதாக கூறி பாறசாலை காவல்நிலையத்திற்கு சென்று ஷாஜி சரணடைந்தார்.

'இதுதான் நாடக காதல்' பெண் கொலையால் கள்ளக்குறிச்சியில் வெடித்துள்ள பூகம்பம்..!

இந்த கொலை குறித்து மீனாவின் மகன் கூறுகையில், தனது தந்தை ஷாஜி தினமும் குடிந்துவிட்டு வந்து தாயாரை அடிப்பதை வழக்கமாக கொண்டவர். எவ்வளவு முயற்சி செய்தும் அப்பாவியான தனது தாயாரை கொலை செய்த தந்தையை அரசு கடும் தண்டனை வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இது குறித்து பாறசாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிக்க பணம் தரமறுத்த மனைவியை வெட்டிகொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி