ஆப்நகரம்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்

ராமநாதபுரத்தில் தினந்தோறும் குடித்துவிட்டு தொந்தரவு செய்த கணவன், சந்தேகம் அதிகரித்ததால் மனைவியை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 May 2019, 6:54 pm
ராமநாதபுரத்தில் தினந்தோறும் குடித்துவிட்டு தொந்தரவு செய்த கணவன், சந்தேகம் அதிகரித்ததால் மனைவியை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது
மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது


சாயல்குடி அருகேவுள்ள கடுகுசந்தை என்ற பகுதியை சேர்ந்த குருசாமி (65) மற்றும் அழகுவள்ளி (60) தம்பதியினர் மத்தியில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் குருசாமி, மனைவியை அடித்து தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர், அழகுவள்ளியுடன் சண்டை பிடித்துள்ளார். அப்போது தகராறு முற்றியதில், மனைவியின் நடத்தையின் சந்தேகப்படுவதாக கணவர் கூறியுள்ளார்.

இதில் இருவருக்குமிடையில் தகராறு முற்றியுள்ளது. அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அழகுவள்ளியை சராமாரியாக தாக்கியுள்ளார் குருசாமி. இதில் தலையில் வெட்டுப்பட்ட அழகுவள்ளி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழகுவள்ளியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கணவர் குருசாமியை கைது செய்த காவலர்கள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி