ஆப்நகரம்

கணவன், மனைவி தகராறில் படுபயங்கரம்- சேலத்தில் இப்படியொரு கொடூர கொலையா!

சேலம் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 26 Jun 2019, 5:44 pm
சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி அருகில் உள்ள வெடிக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது வயது 47. கூலி வேலைக்கு சென்று வரும் இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், அன்னபூரணி என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
Samayam Tamil Murder


மகள் அன்னபூரணிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மனைவி தங்கமணி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். பாலசுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் உள்ளதால், தினசரி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்கமணி அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். பின்னர் சமாதானப்படுத்தி மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு நள்ளிரவு வரை நீடித்த நிலையில், குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி ஆத்திரமடைந்து வீட்டுக்குள் கிடந்த அரிவாளை எடுத்து வந்து தங்கமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணியின் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

இதனிடையே கணவன் பாலசுப்ரமணியம் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்த பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி