ஆப்நகரம்

மனைவியை கொன்று காணவில்லை என்று நாடகம் ஆடிய கணவன்.. இறுதியில் நேர்ந்தது என்ன?

பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 30 Aug 2019, 6:41 pm
பொள்ளாச்சியில் உள்ள பொன்னாபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான சக்திவேல். இவருக்கும் கவுசல்யா என்ற பெண்ணுக்கும் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
Samayam Tamil polla


குடும்பத்துடன் வசித்து வந்த சக்திவேல் சமீபத்தில் தன் மனைவி காணவில்லை என பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் கவுசல்யாவை தேடும் வேட்டையில் இறங்கினர்.

தீவிரமாக தேடியும் கவுசல்யாவை பற்றி துப்பு கிடைக்காததால் விசாரணையின் கோணத்தை மாற்றினர். அப்போது கவுசல்யாவுக்கும், சக்திவேலுக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவும் இருந்து வந்துள்ளது.

போலீசாருக்கு சக்திவேலின் மீது சந்தேகம் தீவிரமானதும் குறுக்கு விசாரணையில் சக்திவேல் பலமாக சிக்கிக்கொண்டார். அதன் பிறகு அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதில், மனைவி கவுசல்யா மீது நீண்ட நாட்களாகவே சக்திவேலிற்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் பலமுறை கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்படும். கடந்த மாதம் 26 ம் தேதி வழக்கமாக நடந்த வாக்கு வாதத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல், மனைவி கவுசல்யாவை கொன்று, மூட்டையில் கட்டி ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.

சக்திவேல் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி போலீசார் பிணத்தை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி