ஆப்நகரம்

இப்படியொரு கொடூர கொலையா? தகாத உறவால் ஏற்பட்ட பயங்கரத்தில் வசமாக சிக்கிய கணவர்!

மனைவியின் தகாத உறவால் கொடூர கொலை செய்த கணவனை விருதுநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2020, 2:33 pm
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்(26). இவரது மனைவி தனலட்சுமி(26). இவர் கணவரை விட்டுப் பிரிந்து படந்தால் கிராமத்தில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வருகிறார். இந்த சூழலில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்(25) என்பவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அதாவது சிவகாசியில் இருக்கும் போதே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அது படந்தால் வரை தொடர்ந்துள்ளது.

கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு தனலட்சுமி வீட்டிற்கு கணவர் விக்னேஷ்குமார் வந்துள்ளார். அப்போது தனலட்சுமியும், சதீஷும் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மீண்டும் அத்துமீறிய போலீஸ்? அதிர்ச்சியூட்டும் ஆட்டோ ஓட்டுநர் மரணம் - தென்காசி பயங்கரம்!

இதனால் ஆத்திரமடைந்த அவர், வீட்டின் வெளியே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்து விக்னேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், நடந்த தவறை தனலட்சுமி ஒப்புக் கொண்டார்.

அதாவது, கணவர் தனது வீட்டிற்கு வரும் போது சதீஷ் தன்னுடன் இருந்துள்ளார். அப்போது சதீஷ் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிப்பதாக கூறி அவரது காலை பிடித்து கொண்டதாகவும், தலையில் கல்லைப் போட்டு கணவர் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தனலட்சுமியை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று சிவகாசியில் சுற்றித் திரிந்த விக்னேஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை சாத்தூர் டவுன் காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை மிரட்டல் டு பாலியல் தொந்தரவு..! நடிகை பூர்ணா வழக்கில் என்ன நடந்தது?

பின்னர் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துப் பரிசோதனை முடித்து சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி விசாரணைக்குப் பின் விருதுநகர் சிறைச்சாலைக்கு சாத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் சுபக்
குமார் தலைமையிலான குழு விக்னேஷ்குமாரை அழைத்து சென்றனர்.

அடுத்த செய்தி