ஆப்நகரம்

இப்படியொரு கொடூர இரட்டை கொலையா?- தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!

மனைவியை மிகக் கொடூரமாக கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

Samayam Tamil 16 Feb 2020, 12:51 pm
தமிழ் கலாச்சாரம் உலகில் மிகவும் பிரபலமான ஒன்று. இதனை உணர்ந்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் தமிழகம் வந்து அதனைக் கொண்டாடி செல்கின்றனர். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சில சம்பவங்கள் ஒரு கறையாக படிந்துவிடுகின்றன.
Samayam Tamil Murder


அந்த வகையில் தனது மனைவியின் தவறான பழக்கத்தால் நினைத்து பார்க்க முடியாத கொடூர செயலை கணவர் செய்திருக்கிறார். இதன் பின்னணி குறித்து இங்கே காணலாம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டயபுரம் அருகே புங்கவர்நத்தம் என்ற கிராமம் அமைந்துள்ளது.

திருப்பதி அருகே பயங்கரம்... பெருமாள் கோயில் தேருக்கு தீ வைப்பு

இங்கு வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவி மாரியம்மாள். இந்த பெண்ணிற்கும், அதே ஊரை சேர்ந்த ராமமூர்த்திக்கும் இடையே தவறான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கணவர் சண்முகம் பலமுறை கண்டித்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை ராமமூர்த்தி, மாரியம்மாள் ஆகியோர் ஒன்றாக இருப்பதை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் கோபமடைந்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பசுவந்தனை போலீசாரிடம் நேரடியாக சென்று சண்முகம் சரண் அடைந்துள்ளார்.

நர்ஸிடம் சிலுமிஷம்... கைதான மருத்துவர் காவல் நிலையத்தில் எஸ்கேப்..!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சண்முகத்தை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி