ஆப்நகரம்

காதல் மனைவி கர்ப்பம்... குழந்தை மீது கணவன் சந்தேகம்... திருச்சியில் இப்படியொரு கொடுமை

திருச்சியில் காதல் கணவன் மீது இளம்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2021, 11:38 pm
திருச்சியில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத கோட்டை மகளிர் காவல் நிலையம் முன்பு இளம் பெண் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம். அப்பெண் அனுபவித்தும் வரும் பிரச்சினை என்ன?
Samayam Tamil Trichy Crime News


திருச்சி இ.பி. ரோடு பகுதியிலுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் திவ்யா (31). இவரும், அதே தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பே திவ்யா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் திவ்யாவிற்கு 8 மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

மேலும், குழந்தை பிறந்ததில் சந்தேகம் உள்ளது, அதோடு வரதட்சணையாக 10 பவுன் வழங்க வேண்டுமென்று கூறி திவ்யாவையும், அவரது குடும்பத்தாரையும் கணவர் ஞானசேகரன், மாமனார் சண்முகம், மாமியார் தையல்நாயகி ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

இதனிடையே தனிக்குடித்தனம் நடத்தி வந்த திவ்யாவை விட்டுவிட்டு ஞானசேகரன் சென்றுவிட்டார். அவர் எங்கே சென்று உள்ளார்? என்பது தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெறுவதாக திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இதுகுறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்த காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த திவ்யா இன்று திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம் மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான இருவருக்கும் திடீர் நெஞ்சு வலி...

தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து திவ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து திவ்யா தனது போராட்டத்தை கைவிட்டு திரும்பினார்.

அடுத்த செய்தி