ஆப்நகரம்

'இன்னொரு வீடியோ வரை நான் இருப்பேனா தெரியல'... கலங்கும் நித்யானந்தா சிஷ்யை...

நித்யானந்தாவின் பிடியில் இருக்கும் தத்துவ பிரியானந்தா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வீடியோ ஒன்று வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 7 Jan 2020, 3:53 pm
நித்தியானந்தா மீது அகமதாபாத் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கிறார். இந்த பரபரப்பான சூழலில் அவர் கடத்தி விட்டதாக கூறப்படும் சிஷ்யை வெளியிட்டுள்ள பகீர் வீடியோ இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இன்னொரு வீடியோ வரை நான் இருப்பேனா தெரியல


பெங்களூர் : நிதியானந்தாவுடைய தனிப்பட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஜனார்தன் ஷர்மா. இவர் தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனையும் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர் ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஷர்மா தனது பிள்ளைகளை மீட்க பிடதிக்கு சென்றார். ஆனால் அங்கிருந்து அவரது நான்கு பிள்ளைகளையும் அகமதாபாத் ஆசிரமத்திற்கு கடத்தி சென்றுள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார் ஷர்மா.

ஒரு வருடமாக சீரழித்தனர்... கர்ப்பிணி பெண்ணின் அதிர்ச்சி புகார்..! 2 பேர் மீது வழக்கு...

இதையடுத்து அகமதாபாத் ஆசிரமத்திற்கு சென்ற அவர் கடும் எதிர்ப்புகளை தாண்டி தனது கடைசி மகனையும், மகளையும் மீட்டார். ஆனால் மூத்த மகள்களான லோபா முத்ரா என்ற தத்துவ பிரியானந்தா மற்றும் நந்திதா என்ற நித்ய நந்திதா இருவரும் அங்கு காணவில்லை.


அதன் பின்னர் மேற்கு இந்திய தீவுகளில் நித்தியானந்தாவுடன் இரு சிஷ்யைகள் இருப்பதாகவும், எங்களுக்கு தங்கள் தந்தையால் ஆபத்து உள்ளதெனவும் கூறி மகள்கள் இருவரும் முகநூலில் வீடியோ வெளியிட்டு வந்தனர். எனினும் மகள்களை மீட்டு தரக்கோரி ஜனார்தன் ஷர்மா தொடர்ந்த வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் சிஷ்யைகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கு சிஷ்யைகள் தரப்பில் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஷர்மாவுடைய மூத்த மகளான தத்துவ பிரியானந்தாவுக்கு ஆசிரமத்தில் ஆபத்து உள்ளதாக அவரே பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு படை வீரரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி - வைரல் வீடியோ!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள ஜனார்தன் ஷர்மா அகமதாபாத் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே கொடுத்த புகாரில் வழக்கு நடைபெற்று வருவதால், போலீசார் எந்தவித அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் இரு சிஷ்யைகளும் குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி