ஆப்நகரம்

கழிவறையில் இருந்த மாணவிகளை படம் பிடித்த அலுவலர்..? சென்னை ஐஐடி-யில் பரபரப்பு...

சென்னை ஐஐடி வளாகத்திற்குள் உள்ள பெண்களில் கழிவறையில் திருட்டு தனமாக கேமரா பொருத்திய திட்ட அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Feb 2020, 2:49 pm
கர்நாடக மாநிலத்தில் பிஎச்டி படித்து வரும் மாணவி ஒருவர் விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். அதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil ஐஐடி கழிவறையில் இருந்த மாணவிகளை படம் பிடித்த அலுவலர்


அப்போது தன்னை சுற்றி ஏதோ நடப்பதாக உணர்ந்த அந்த மாணவி அறையை சுற்றி பார்த்தபோது சுவரில் சிறிய துளை இருப்பதை கண்டார். பின்னர் அந்த துளையை உன்னிப்பாக கவனித்தபோது அங்கிருந்த ஒரு நபர் நழுவி செல்வதை கண்டு உடனே கழிவறைக்கு வெளியே சென்று அந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த நபரிடம் ' நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என மாணவி கேட்கையில், அந்த நபர்; நான் இந்த பக்கமாக வந்து கொண்டிருந்தேன் என அப்பாவி போல பதில் அளித்துள்ளார்.

பொதுத்தேர்வில் ஃபிராடு பண்ணி பாஸ் ஆவது எப்படி? டிப்ஸ் கொடுத்த முதல்வரை சிக்க வைத்த மாணவர்கள்!

ஆனால் குழப்பத்தில் இருந்த மனைவி அந்த நபரிடம் இருந்த செல்போனை பிடுங்கி பார்த்ததில் அதில் எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் கழிவறைக்குள் இருக்கும்போது துளை வழியாக செல்போனை வைத்தது அந்த நபர்தான் என்பதை உறுதியாக கூறிய அந்த மாணவி சக மாணவர்களை அழைத்து சம்பவத்தை விவரித்தார். பின்னர் இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபம் பேனர்ஜீயை கைது செய்து அவரது செல்போனை சோதனை செய்தனர். ஆனால் அதில் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் அந்த நபர் ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்ற அடிப்படையில் செல்போனை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி