ஆப்நகரம்

கணவனை கைவிட்டு காதலனுடன் வாழ்ந்த இளம் பெண்... போதையில் கொன்ற காதலன்

போதையில் பெண்ணைத் தாக்கி உயிருடன் புதைத்த கொடூரம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 2 Jun 2020, 1:28 pm
திருப்பதி: கணவனைக் கைவிட்டுவிட்டு காதலனுடன் வாழ்ந்து வந்த பெண்ணை, குடிபோதையில் அந்தக் காதலனே உயிரோடு புதைத்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூரான காண்ட்லவரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சுபாஷினி. கணவனை கைவிட்ட சுபாஷினி தன்னுடைய ஒரே மகளுடன் அதே ஊரை சேர்ந்த புடபுக்கலசாமி என்பவருடன் ஒன்றாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் புடபுக்கலசாமி கோபத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சுபாஷினியை தாக்கியுள்ளார். இதில் மயங்கி சரிந்த சுபாஷினியை, புடபுக்கல சாமி, தன் வீட்டுக்கு அருகே இருக்கும் வயல் வெளியில் உள்ள புதர் ஒன்றின் கீழ் குழிதோண்டி உயிரோடு புதைத்துள்ளார்.

Pudukkottai: பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை... நடந்தது என்ன? முழு விவரம்

இதையெல்லாம் ( தன் தாய்க்கும், தாயின் காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, தாயின் காதலன் தன் தாயை கட்டையால் தாக்கியது, பின்னர் தன்னுடைய தாயை வெளியே தூக்கி சென்றது ஆகியவை ) பார்த்துக் கொண்டிருந்த சுபாஷினியின் மகளை, “யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன்” என்று மிரட்டிய புடபுக்கலசாமி ஊரிலிருந்து தப்பி சென்றுவிட்டான்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் பற்றி சுபாஷினியின் மகள் உறவினர்களிடம் கூறினார்.உறவினர்கள் அளித்த புகாரின் பெயரில் கொடவலூரு போலீசார் காண்ட்லவரம் கிராமத்திற்கு சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சுபாஷினி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் புடபுக்கலசாமியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி