ஆப்நகரம்

சூனியம் என்ற பெயரில் பெண்ணை சீரழித்த சாமியார் கைது

சூனியம் வைக்க உதவுவதாக கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 35 வயது வயது மாந்த்ரீகர் ஒருவர் அவரை நாடிவந்த பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

Samayam Tamil 29 May 2019, 3:10 pm
சூனியம் வைக்க உதவுவதாக கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 35 வயது வயது மாந்த்ரீகர் ஒருவர் அவரை நாடிவந்த பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த மாந்த்ரீகர் 3 முறை திருமணம் முடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
Samayam Tamil sex


செல்வமணி அல்லது பெருமாள்மணி என்ற நபர் தன் திண்டிவனம் வீட்டில் வைத்து 19 வயது பெண்ணை 6 மாதங்களாக பாலியல் தொல்லை செய்துள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சமாதானப்படுத்தி செல்வமணி, அவர்களது பெண்ணை தன் வீட்டில் 6 மாதங்களுக்கு வைத்துக்கொள்ள அனுமதி பெற்றார். பின்னர் சூனியம் என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த பெண்ணை கல்லூரிக்கு செல்வமணி தினமும் கொண்டு விட்டுள்ளார். மேலும் இந்த பெண்ணுடன் சமீபத்தில் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விட்டு ஓனர் வீட்டை காலிச் செய்ய வலியுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் செல்வமணியுடன் தகராறில் ஈடுபட்டதால் வீட்டு ஓனர் காவலர்களிடம் புகார் அளித்தார்.

அடுத்த செய்தி