ஆப்நகரம்

இந்தியன் வங்கியின் ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சிவகங்கை ஆயுதப்படை காவலர் யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Samayam Tamil 2 Mar 2020, 3:22 pm
மதுரை மாவட்டம் மேல்கூரைச் சேர்ந்த ஆயுத படை வீரர் யோகேஷ்வரன் . இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இரவில் யோகேஸ்வரனும் பகலில் மற்றொரு காவலரும் பணியில் இருந்து வந்துள்ளனர்.
Samayam Tamil இந்தியன் வங்கியின் ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை



இந்த நிலையில் நேற்று வழக்கம்போல பகல் டியூட்டிக்காக வந்த மற்றொரு காவலர் வங்கி கதவை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த காவலர் உடனே வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் அங்கு வந்த மேலாளர், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறைக்குள் யோகேஸ்வரன் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


உடனே வங்கி மேலாளர் இதுகுறித்து சிவகங்கை போலீசாருக்கு தெரியப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் யோகேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை காரில் கடத்தி சீரழித்த 2 காம வெறியர்கள்... அதுவும் தமிழ்நாட்டில்!

இதுகுறித்த வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் யோகேஷ்வரனின் மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். பணியில் இருந்த ஆயுதப்படை வீரர் வங்கிகுள்ளேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி