ஆப்நகரம்

புகார் கொடுக்க வந்த தாய், மகள் முன்பு சுய இன்பம் செய்த இன்ஸ்பெக்டர்..!

உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு முன்பாக சுய இன்பம் செய்த இன்ஸ்பெக்டரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Samayam Tamil 1 Jul 2020, 3:17 pm
உத்தரப் பிரதேசம் மாநிலம் பட்னி காவல் நிலையத்துக்கு ஜூன் 22 ஆம் தேதியன்று நில தகராறு தொடர்பாக புகார் கொடுக்க பெண் ஒருவர் தனது மகளுடன் வந்துள்ளார். அந்த நேரத்தில், இன்ஸ்பெக்டர் பீஷம்பல் சிங் யாதவ் தனது அறையில் அமர்ந்திருந்தார். இன்ஸ்பெக்டரை சந்தித்த அவர்கள், பிரச்சனையை குறித்து விவரிக்க தொடங்கியுள்ளார்.
Samayam Tamil inspector masturbates at police staion


அப்போது, பீஷம்பல் சிங் யாதவ் நாற்காலியில் அமர்ந்தபடி சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை சுதாரித்துக்கொண்ட தாயுடன் வந்த மகள் அந்த காட்சியை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற அவர்கள், இன்ஸ்பெக்டரின் மோசமான செயலை குறித்து உறவினர்களிடம் தெரிவித்து அந்த வீடியோவையும் காட்டியள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டருகில் இருக்கும் வாலிபர் ஒருவர் மூலம் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விவாகரத்து ஆன பெண்ணுடன் காதலாம்..! '96' ஸ்டைலில் நாமம் போட்ட வாலிபர்...

அதனை தொடர்ந்து, இன்பெக்டரின் மோசமான செயலுக்கு பல தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தியோரியா கூறுகையில், பட்னி காவல் நிலையத்தில் தவறான செயலில் ஈடுபட்ட ஆய்வாளர் பீஷம்பால் சிங் யாதவ் மீது பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்க செல்லும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இதுவரை இல்லை என்ற அவலம் சாத்தான்குளத்திலிருந்து டெல்லி வரை தொடர்கதையாகி வருகிறது. காவலர் பணிக்கு உடல் ஆரோக்கியம், படிப்பு என்பது மட்டுமே தகுதி ஆகிவிட முடியாது. மக்களை மதிக்கும் மனப்பான்மை பணி ஒய்வு வரைக்கும் இருந்தால் மட்டுமே காவல்துறையில் கரை படியாமல் இருக்கும்.

அடுத்த செய்தி