ஆப்நகரம்

போலி ஆவண மோசடி: வங்கி மேலாளர் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்த வங்கி மேலாளர் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2019, 10:05 am
வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்த வங்கி மேலாளர் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil போலி ஆவண மோசடி: வங்கி மேலாளர் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
போலி ஆவண மோசடி: வங்கி மேலாளர் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக வங்கி மேலாளர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளர் கல்யாணசுந்தரம் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனிடையே அமைச்சர் உட்பட ஆறு பேரும் பிணைத் தொகை செலுத்தி உடனடியாக ஜாமீனில் வெளிவந்தனர். முக்கிய குற்றவாளியான வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கல்யாண சுந்தரம் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி