ஆப்நகரம்

மதம் மாற சொன்னதுதான் தற்கொலைக்கு காரணமா? பூதாகரமாகும் தஞ்சை மாணவி விவகாரம்

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2022, 11:10 am
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வார்டன் ஹாஸ்டலில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அறியலூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி அன்று மாணவி தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார்.
Samayam Tamil thanjavur student suicide


அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்ற நிலையில், மகளுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


பரிசோதனையில், மாணவி பூச்சி மருந்தை சாப்பிட்டது தெரிய வரவே, அவரிடம் மருத்துவர்கள் விசாரித்ததில், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.

கட்டிய தாலியை வீசி எறிந்த பெற்றோர்... காதல் மனைவி சென்றதால் வாலிபர் தூக்கில் தொங்கிய துயரம்..!

இதனிடையே சிகிச்சை பலனின்றி மாணவி இறந்து விட்டார். இந்த சூழலில், மாணவியை மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால்தான் தற்கொலைக்கு முயன்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்துள்ளனர். ஆனால், பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என தஞ்சை எஸ்.பி. ரவளி பிரியா விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி