ஆப்நகரம்

சென்னையில் நாடக காதல்... வாழ்க்கையை தொலைத்த ஐ.டி.பெண் ஊழியர்..!

காதல் கணவனால் வரதட்சணை கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 4 Jun 2020, 2:31 pm
சென்னை மதுரவாயலில் வசித்து வருவர் செந்தில்நாதன். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்முகத் தேர்வுக்காக கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு அதேபோன்று நேர்முகத்தேர்வுக்கு வந்த பண்ருட்டியைச் சேர்ந்த நாகநந்தினி என்பவருடன் செந்திலுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
Samayam Tamil ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை முயற்சி


பின்னர் இருவரும் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பழக ஆரம்பித்துள்ளனர். சில நாட்களில் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்காக நாகநந்தினியின் வீட்டில் 20 பவுன் நகை போடுவதாக ஒப்புக்கொண்டு ஆரம்பத்தில் 15 சவரன் மட்டும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் காதல் கணவனுடன் குடும்பம் நடந்து வந்த நாகநந்தினியிடம் மீதி 5 சவரன் நகை கேட்டு செந்தில்நாதனின் தாயும், சகோதரியும் தகாத வார்த்தைகளை கூறி சித்தரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்துக்காக தந்து பெற்றோர் வாங்கிய கடன்களே அதிகமாக உள்ளது என கூறிய நாகநந்தினி, மிச்சமுள்ள 5 சவரன் நகையை விரைவில் ஒப்படைப்பதாக விளக்கியுள்ளார். இதை ஏற்றுக்கொலாத செந்தில்நாதனும் அவரது குடும்பமும் நாகநந்தியை அடித்து அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

'திருடன் கையில் சாவி'... கோவை குற்றப்பிரிவு பெண் போலீஸ் கைது..!

'வந்தால் நகையுடன் வா இல்லையே தற்கொலை செய்துகொள். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன்' என செந்தில்நாதன் நாகநந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நாகநந்தினி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விபத்தில் இரு கால்களும் முறிந்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நாகநந்தினியை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நாகநந்தியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்தில்நாதன், அவரது தாய் மற்றும் சகோதரியை வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளினர்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் கணவனே 5 சவரன் நகைக்காக மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாடககாதலின் குறிக்கோளை அப்பட்டமாக காட்டியுள்ளது.

அடுத்த செய்தி