ஆப்நகரம்

கன்னியாகுமரி அருகே பழமை வாய்ந்த அம்மன் கோவிலில் நகைகள் மாயம்

குமரி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் அணிந்திருந்த 17 சவரன் தங்க நகைகள் திருட்டு.

Samayam Tamil 17 Sep 2020, 9:23 pm
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாலையிலேயே அம்மனை வழிபட்டு பூஜை செய்வது வழக்கம்.
Samayam Tamil temple


அந்த வகையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பக்தர் ஒருவர் அம்மனை தரிசிக்க கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவிலின் பின்பக்கம் அமைந்துள்ள கருவரை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக கோவில் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.


அதனடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் கோவிலினுள் சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் யாரோ கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் உடலில் அணிவிக்கப்பட்டு இருந்த சுமார் 17 சவரன் நகைகளையும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

ஆபாச லிஸ்டில் மனைவியையும் விட்டுவைக்காத கணவன், திருச்சி கேஷியர் வாக்குமூலம்...

இதுதொடர்பாக அக்கம்பக்கம் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி