ஆப்நகரம்

காஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை

பெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 May 2019, 10:53 pm
பெங்களூருவில் ராகவா ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படம் பாா்க்கச் சென்ற ரசிகருக்கும், திரையரங்கு பணியாளா்களுக்கும் இடையேயான மோதலில் ஒருவா் அடித்து கொலை.
Samayam Tamil Murder Chennai


ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படம் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரே மாதிரியான பேய் கதை என்று விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது.

படத்திற்கு பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. அண்மையில் பெங்களூருவில் பரணிதரன் என்பவர் படம் பார்க்க திரையரங்குகு்கு சென்றுள்ளாா். பைக்கை பார்க் செய்துவிட்டு கிளம்பும்போது பைக் கட்டணம் வசூலிக்கும் நபர் ரூ.10 கேட்டுள்ளார். பரணிதரன் கொடுக்க முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இன்னொரு திரையரங்க ஊழியரும், பைக் கட்டணம் வசூலித்தவரும் பரணிதரனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பரணிதரன் இறப்பு தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி