ஆப்நகரம்

என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவான பிரபல ரவுடி படப்பை குணா சரண்..!

எட்டு கொலை வழக்கு உட்பட 48 வழக்குகளில் தொடர்புடை காஞ்சிபுரம் மாவட்ட பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

Samayam Tamil 25 Jan 2022, 2:56 pm
8 கொலை வழக்கு உட்பட 48 வழக்குகளில் தொடர்புடை காஞ்சிபுரம் மாவட்ட பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண். அவரை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறை வைக்க உத்தரவு.
Samayam Tamil படப்பை குணா


காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

ஆனால், அவருக்கு எதிராக யாரும் புகார் கொடுக்க வராததால், சில போலீசாரே அவருக்கு உதவியாக இருந்ததாலும் ரவுடி குணா மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தை தடுக்கவும் சிறப்பு அதிகாரியாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார்.

போலீசுக்கும் ஆர்மி மேனுக்கும் ஏற்பட்ட மோதல்... வேலூரில் பரபரப்பு சம்பவம்..!

ஏற்கனவே பல என்கவுண்டர்களில் தொடர்புடைய வெள்ளத்துரை காஞ்சிபுரத்தில் நியமிக்கப்பட்டதையடுத்து படப்பை குணா தலைமறைவாகினார். அவரை பல இடங்களில் தனிப்படையினர் தேடி வந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி