ஆப்நகரம்

சீரியல் நடிகை விஷம் குடித்து வீடியோ..! அதிர்ச்சியில் சின்னத்திரை...

காதலனால் ஏமாற்றப்பட்ட கன்னட டிவி நடிகை விஷம் குடிப்பதாக வீடியோ எடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னட திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

Samayam Tamil 2 Jun 2020, 2:38 pm
பெங்களூரைச் சேர்ந்தவர் சந்தனா (29). இவர் கன்னட சின்னத்திரையில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் சந்தனா சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட சந்தனாவின் நண்பர் ஒருவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தனா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
Samayam Tamil சீரியல் நடிகை விஷம் குடித்து வீடியோ


இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் ஆதாரங்களும், மரணத்தின் பின்னணியும் தெரிய வந்தது.

அதாவது சம்பவம் நடந்த அன்று சந்தனா விஷம் அருந்தியதாக வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், என் தற்கொலைக்கு தினேஷ் தான் காரணம். என்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டான் என கதறி அழுதுள்ளார். வீடியோவை சேகரித்துக்கொண்ட போலீசார், சந்தனாவின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்தனர்.

Pudukkottai: பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை... நடந்தது என்ன? முழு விவரம்

அப்போது, சந்தனா கடந்த 5 வருடமாக தினேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், சந்தனாவிடம் ரூ. 5 லட்சம் வரை தினேஷ் பெற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதோடு, கொடுத்த காசையும் திருப்பி தர மறுத்ததாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், வீட்டில் மயங்கிக்கிடந்த சந்தனாவை தினேஷ்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிந்ததும் தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில், தினேஷ் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி