ஆப்நகரம்

பிரபல பாடகருக்கு இப்படியொரு பயங்கரமா? சென்னையில் நடந்த கோர சம்பவம்...!

சென்னையில் பிரபல பாடகர் ஒருவரின் வாகனத்தை மடக்கி, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2019, 10:55 am
தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீசாரின் நடவடிக்கையும் மீறி, அசம்பாவிதங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னை அயனாவரத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Samayam Tamil Robbery


கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் சூர்யகலா. இவர் கரோக்கி பாடகராக இருந்து வருகிறார். இந்நிலையில் கச்சேரி ஒன்றிற்கு சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் பரபரப்பு- யார் அந்த 2 பேர்? திமுக பிரமுகர் அதிர்ச்சிகர புகார்!

அப்போது அயனாவரம் பேருந்து நிறுத்தம் அருகே பில்கிங்டன் சாலையில் நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை மடக்கியுள்ளது. அப்போது சுமார் நள்ளிரவு 12.30 மணி இருக்கும். ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்திருங்கிய கும்பல், சூர்யகலாவை கீழே தள்ளி விட்டனர்.

இதில் அவர் சாலையோரம் விழுந்தார். பின்னர் அவரிடம் இருந்து செயினைப் பறித்துள்ளனர். ஆனால் அது தங்கச் செயின் இல்லை என்பதை அறிந்து கொண்டனர். உடனே அவருடைய பையில் என்ன இருக்கிறது என்று சோதித்துள்ளனர்.

தாராபுரத்தில் ஒரே நாளில் இரு கொள்ளை சம்பவம்- பொதுமக்கள் பீதி!

அதில் லேப்டாப், இரண்டு செல்போன்கள், ரூ.1,500 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தப்பியோடி உள்ளனர். இதற்கிடையில் சாலையில் விழுந்த சூர்யகலா, மயங்கி உள்ளார்.

அப்போது அந்த வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன், சூர்யகலாவை மீட்டு, செம்பியம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

திருப்பூர் அருகே சுடுகாட்டில் ஆண் சடலம்- கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சிகிச்சைக்கு பின்னர், சூர்யகலா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி