ஆப்நகரம்

திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட்..! செந்தில்பாலாஜி ஷாக்?

அதிமுகவிலிருந்து திமுக சென்ற முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ்க்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது கரூர் நீதிமன்றம்.

Samayam Tamil 22 Mar 2022, 7:29 pm
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான எஸ்.காமராஜ், கடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் மீண்டும் சீட் கொடுக்காததினால், திமுகவில் இணைந்தார்.
Samayam Tamil file pic


அன்று முதல் இன்றுவரை திமுக கட்சியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வரும் இவருக்கு, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட எந்த ஒரு சீட்டும் தரவில்லை என்பது வேறு கதை.

இந்நிலையில், கரூர் காசோலை மோசடி வழக்கு விரைவு நீதிமன்றம் இவர் ஆஜராகாத நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டான்கோவில் கீழ் பாகம் அம்பாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் ரூபாய் 10 லட்சம் கடன் பெற்று ஆதாரத்திற்கு காசோலை கொடுத்து கடன் தொகை பெற்றுள்ளார்.

16 வயசு, 19 வயசு மாணவிகளுடன் ஆசிரியர் ஓட்டம்... 2 ஆண்டுகளுக்கு பின் கைதான சம்பவம்

இதையடுத்து காமராஜ் கம்பி நீட்டுவதாகக்கூறி கடன் கொடுத்தவர் நீதிமன்றத்தினை நாடினார். இந்த வழக்கு கரூர் காசோலை மோசடி வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாத நிலையில் கரூர் காசோலை மோசடி வழக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி சரவண பாபு, முன்னாள் திமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி