ஆப்நகரம்

கரூரில் கஞ்சா தோட்டம்... தலைமறைவானவர், பொங்கல் கொண்டாட்டத்தின்போது கைது...

கரூரில் கஞ்சா தோட்டம் அமைத்து கஞ்சா செடிகளை வளர்த்து சட்ட விரோதமாக அதை விற்று வந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபரை 6 வாரங்களுக்குப் பிறகு தேசிய போதை தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர்.

Samayam Tamil 17 Jan 2020, 5:34 pm
கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். வயது 55. இவருக்குச் சொந்தமாகக் கரூரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருணாசலம் என்பவருக்குக் கடந்த 2 வருடங்களாகக் குத்தகைக்கு விட்டுள்ளார்.
Samayam Tamil Jamaicas-ganja-tours-008


குத்தகைக்கு எடுத்த நிலத்தில் முருகன், தங்கவேலு என்பவர்களை, அருணாசலம் வைத்து கஞ்சா விவசாயம் செய்து வந்துள்ளார். முருகன், தங்கவேலு இருவரும் போடி வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் கஞ்சா வளர்ப்பதில் கைதேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து அருணாச்சலம் மீது புகார்கள் அரசுக்கு வந்துள்ளது. புகார்களின் அடிப்படையில் தேசிய போதை தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள், கரூரில் சம்பந்தப்பட்ட இடத்தை அதிரடியாகச் சோதனை செய்தனர்.

நாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு!!

அப்போது 72 செண்ட் நிலப்பரப்பில் கஞ்சா செடிகளை அருணாச்சலம் வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிலத்திலிருந்து முருகன், தங்கவேலு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே வேளையில், அருணாச்சலம் தலைமறைவாகினார். அருணாச்சலம் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில், போதை தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் அருணாச்சலத்தின் தொலைப்பேசி உரையாடல்களைக் கண்காணித்து வந்தனர்.

இதனடிப்படையில் அருணாச்சலம், பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊருக்கு வருவார் என அதிகாரிகள் அறிந்து கொண்டனர். அருணாச்சலத்திற்காகக் காத்திருந்த அதிகாரிகள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கைது செய்தனர்.

நித்தியின் கைலாசா சென்ற முக்கிய சீடர் மர்ம மரணம்..! சிஷ்யை பகீர்...

கைது செய்த அருணாச்சலத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 790 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட கஞ்சாவின் சர்வதேச விலை ரூ. 28 லட்சம் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி