ஆப்நகரம்

விபரீத காதல் இதுதான் போல; வால்பாறையில் கேரள மாணவி உடல் - திக் திக் நிகழ்வுகள்!

கேரளாவை சேர்ந்த மாணவியை அவரது ஆண் நண்பர் கொலை செய்து தமிழகத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 11:50 am
கேரள மாநிலம் கொச்சி அடுத்த மரடு பகுதியை சேர்ந்த இளம்பெண் கோபிகா. இவர் பிளஸ் டூ படித்து கொண்டிருந்தார். இதையடுத்து கல்லூரி படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil Murder


இந்நிலையில் ஜாபர் என்ற இளைஞர் கோபிகாவை காதலித்து வந்துள்ளார். இவர் மரடுவில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென கோபிகாவை காணவில்லை என்று அதிரப்பள்ளி போலீசாரிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

100க்கும் அதிகமான பெண் சிசுக் கொலை; தமிழகத்தை உலுக்கும் ஸ்கேன் சென்டர்- அதிர்ச்சி பின்னணி!

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜாபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரிக்கையில் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார்.

ஆனால் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை உளறிக் கொட்டி விட்டார். தானும் கோபிகாவும் தீவிரமாக காதலித்து வந்தோம். ஆனால் ஒருகட்டத்தில் தன்னை பிடிக்கவில்லை என்று கூறினார்.

கத்தி, கயிறு; பலமுறை பாலியல் சித்ரவதை- கொடூரனை சிக்க வைத்த சிறுமியின் தோழி!

இதனால் ஆத்திரமடைந்து அவரை கொல்ல திட்டமிட்டேன். கோபிகாவை காரில் அழைத்துச் சென்று திருச்சூர் அருகே கொலை செய்தேன். பின்னர் அவரது உடலுடன் காரில் தமிழகத்திற்கு சென்றேன்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே டீ தோட்டம் ஒன்றில் உடலை வீசி விட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்தார். உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றினர்.

வளைகாப்பு நடந்த அடுத்த நாளில் கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை... புதுவையில் சோகம்

அவரது உடலை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி