ஆப்நகரம்

ரயில் பயணிகள் மீது தீ வைத்த நபர்.. உபிக்கு சென்று தூக்கிய கேரள போலீஸ்.. பரபர பின்னணி

கேரளாவில் ரயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த நபரை கேரள போலீஸார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.

Samayam Tamil 4 Apr 2023, 4:23 pm
திருவனந்தபுரம்: கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த பயங்கர குற்றவாளியை கேரள போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Samayam Tamil kerala train invest


உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருந்த அந்த நபரை சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு போலீஸார் கைது செய்தனர். அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்தான் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2-ம் தேதி மதியம் வழக்கம் போல புறப்பட்டுச் சென்றது. இதனிடையே, கோழிக்கோடு அருகே சென்ற போது இரவு 10 மணியளவில் யாருமே எதிர்பாராத ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.

கொடூர சம்பவம்

அங்கிருந்த பயணி ஒருவர் D 1 பெட்டியில் உள்ள பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றினார். என்ன நடக்கிறது என அந்தப் பயணிகள் சுதாரிப்பதற்கு உள்ளாக, அவர்கள் மீது அவரை நெருப்பு வைத்தார். இதில் ஒரு சில நொடிகளிலேயே அவர்களின் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் 3 பேர் அலறியடித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்துள்ளனர். மற்றவர்கள் ரயிலுக்கு உள்ளேயே உடலில் தீயுடன் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடினர். இந்தக் கொடூர சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் 1 வயது குழந்தையும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் சஹாரா, ரஹ்மத், சவுபிக் என அடையாளம் காணப்பட்டனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீவிரவாத தாக்குதலா?

இந்நிலையில், சம்பவம் நடந்த ரயிலில் போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ரயில் தண்டவாளத்தில் இருந்த டைரியை சோதனை செய்த போது, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. மேலும், தச்சன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை தவிர, 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் எனவும் போலீஸார் சந்தேகித்தனர்.

அதிரடி கைது

இதன் அடிப்படையில், என்ஐஏ விசாரணைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்த புலனாய்வில், அந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த கேரள போலீஸார், புலந்த்சாகரில் பதுங்கிருந்த ஷாருக் சைபி என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். எதற்காக அவர் இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி