ஆப்நகரம்

கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. பெண்களின் உரிமைக்காக போராடும் கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் சம்பவமாக இது மாறியுள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 4:19 pm
கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. பெண்களின் உரிமைக்காக போராடும் கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் சம்பவமாக இது மாறியுள்ளது.
Samayam Tamil download


கடந்த 16 ஆம் தேதி பலாக்காட்டில் சாலையோரத்தில் யாரோ வீசிச் சென்ற பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. அந்த குழந்தையின் தாயே அதை குப்பைத்தொட்டியில் வீசியது, சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதை ஆதாரமாக வைத்து குழந்தையின் தாயை காவல்தூறையினர் கண்டுபிடித்தனர்.

அவரிடத்தில் நடைபெற்ற தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சுமார் 10 மாதங்களுக்கு முன் கல்லூரி நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க மார்க்சிஸ்டு அலுவகத்திற்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர் அவரை அலுவகத்தில் வைத்தெ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அவர் கர்பமாகியதாக விசாரணையில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கூறும்போது இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசராணை நடந்து வருவதாகவும். சமந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பெண்கள் உரிமையை பற்றி பல போரட்டங்கள் நடத்தும் கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி அறியப்பட்டது. ஆனால் இந்த சம்பம் அக்கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதுபோல் நடந்துள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி