ஆப்நகரம்

கோவை சம்பவம்: கிஷோர் கே சாமி வளைத்து வளைத்து கைது..!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய வழக்கில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 28 Nov 2022, 6:02 pm
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய வழக்கில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார்.அவரை வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இன்று 6மணி நேரம் அவரிடம் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்து கொள்ள அனுமதி அளித்தார்.
Samayam Tamil kishore k swamy
kishore k swamy


சென்னையை சேர்ந்த வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே சாமி சென்னை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோவை சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்து இருந்த வழக்கிலும் கிஷோர் கே சாமி இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டதை அறிந்த கோவை போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரை கோவை 4 வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து வரும் 12ம் தேதி வரை கிஷோர் கே சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து
கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

இதனிடையே, கிஷோர் சாமியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, 6மணி நேரம் மட்டும் சைபர் க்ரைம் போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்துக்கொள்ள அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் க்ரைம் அலுவலகத்தில் போலீசார் கிஷோர் கே சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி