ஆப்நகரம்

அயன் படத்தை மிஞ்சிய தங்க கடத்தல் சம்பவம்..! ஆனா இது புதுசுங்க..

தலை முடிக்குள் 1 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்த கடத்தல் வாலிபரை கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 5 Oct 2019, 4:45 pm
விமான நிலையங்களில் பல்வேறு கடத்தல் குற்றங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எப்படியாவது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்து விடலாம் என கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் நின்னைது கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil 6


அப்படி நினைத்து சிறையில் கம்பி எண்ணுபவர்தான் கேரளாவை சேர்ந்த சவுரத். இவர் மலபுரத்தில் வசித்து வருகிறார். பீஹார் மாநிலம் சார்ஷாவிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த இவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்.

அப்போது தலையில் ஏதோ புடைத்துக்கொண்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள், சற்று சோதனை செய்துள்ளனர். அப்போது உச்சந்தலையில் 1 கிலோ 13 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் எத்தனையோ டெக்னீக்கை கையாளுவார்கள். ஆனால் இவர் வித்தியாசமானவர். தலையில் விக் அணிந்தால் செயற்கையாக இருக்கும் என நினைத்து, உச்சந்தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் ஷேவ் செய்துள்ளார். பின்பு அந்த இடத்தில் தங்கத்தை வைத்து டேப் மூலம் ஒட்டியுள்ளார்.

எப்படியோ இந்த டெக்னீக்கும் விமான நிலைய அதிகாரிகளிடம் எடுபடவில்லை. அவரை கைது செய்த கொச்சி விமான நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி