ஆப்நகரம்

சொத்துக்கும், ஆண் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கைக்கும் 6 கொலைகள்.! ஜோலி தற்கொலை முயற்சி

கேரள மாநிலத்தில் சூப்பில் சைனடு கொடுத்து கணவன் உள்ளிட்ட 6 பேரை கொலை செய்த வழக்கில் சிறையிலிருக்கும் ஜோலி தற்கொலை முயற்சி

Samayam Tamil 27 Feb 2020, 5:42 pm
கேரள மாநில கோழிக்கூடு கூடத்தாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜோலி தாமஸ். இவர் 2002 இல் இருந்து 2016 வரை 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சீரியல் கொலையாளி ஜோலி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
Samayam Tamil ஜோலி தற்கொலை முயற்சி


கடந்த வருடம் அக்டோபரில் தனது முதல் கணவர் ராய் தாமஸை சைனடு கொடுத்து கொலை செய்ததாக ஜோலி கைது செய்யப்பட்டார். அப்போது ஜோலி கடந்த 14 ஆண்டுகளில் சொத்துக்களை அபகரித்து ஆடம்பர வாழ்க்கை வாழ தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் '' ஜோலிக்கு நிறைய ஆன் நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த எல்லை மீறிய உல்லாச வாழ்க்கைக்கு தனது கணவர் ராய் தாமஸ் தடையாக இருந்ததால் அவருக்கு சூப்பில் சைனடு கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார்.

நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ..! துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி!

அதன் தொடர்ச்சியாக மாமனார், மாமியார் மற்றும் அவரது சகோதரர் மூவரையும் அதே பாணியில் தீர்த்து கட்டியுள்ளார். அதன் பிறகு ஜோலி தான் காதலித்து வந்த ஏற்கெனவே திருமணமான ஷாஜி என்வரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவரது உறவுக்கு ஷாஜியின் மனைவியும், மகளும் தடையாக இருந்ததாக கூறி அவர்களையும் திட்டமிட்டு கொலை செய்தார் ஜோலி.


இந்த கொலை வழக்குகளில் கடந்தாண்டு கைதான ஜோலி கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜோலிக்கு சைனடு வாங்கி கொடுத்த குற்றத்தில் எம்எஸ் மேத்யூ மற்றும் பிரஜிகுமார் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த நிலையில் ஜோலி கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி