ஆப்நகரம்

டாக்டர் சோனா கத்தியால் குத்திக்கொலை..! லிவிங் டு கெதர், தனி பிளாட் சம்பவம்...

கேரளாவில் பல் மருத்துவர் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 3:40 pm
கேரளா மாநிலம் முவட்டப்புழாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சோனா (30). இவர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து குட்டநெல்லூர் பகுதியில் டென்டல் கிளீனிக்கை நடத்தி வந்துள்ளனர். ஏற்கெனவே திருமணமான சோனா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து மகேஷுடன் தனி பிளாட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
Samayam Tamil dr sona kerala


இந்த நிலையில், கடந்த காலங்களில் சோனாவிடம் இருந்து மகேஷ் பல லட்சம் ரூபாயை வாங்கி ஏப்பம் விட்டுள்ளார். அதை திருப்பி கேட்டபோது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மகேஷ் மீது சோனா காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அதை தெரிந்துகொண்ட மகேஷ் கடந்த மாதம் 29 ஆம் தேதி கிளீனிக்கிற்கு ஆவேசமாக வந்து சோனாவை கத்தியால் பல இடங்களில் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சோனாவை அருகிலிருந்த மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் 6 வயது சிறுமி..! அடுத்த கொடூரம்

வயிற்று பகுதி சிதைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வந்த சோனா கடந்த ஞாயிற்று கிழமை அன்று உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கில் மகேஷை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்தனர். தெரிந்த கணவரை விட்டுவிட்டு தெரியாத நபரிடம் பழகி பணத்தை ஏமாந்ததோடு, வாழ்க்கையையே முடித்துக்கொண்ட பெண்ணின் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி