சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி பெயர் வேலுமதி. குமார் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இங்கு வேலுமதி அவரது தாயார் கனகம் மற்றும் மகன் பூவரசன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வேலுமதி வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவர்கள் வேலுமதியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அதனை தடுக்க வந்த அவரது தாயார் கணகம் மற்றும் அவரது மகன் பூவரசன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற கொலையாளிகள் வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதி முழுவதையும் ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்திற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ராமநாதபுரம் டிஐஜி துரை, சிவகங்கை பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த வீட்டிற்கு மூப்பனாய் ராம்போ வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக பிஐஜி துறை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் கண்ணங்கோட்டையில் வீட்டில் பெண் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சிவகங்கை பொறுப்பு) தங்கத்துரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது வீட்டில் திருடு போன பொருட்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது தேவகோட்டை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவர்கள் வேலுமதியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அதனை தடுக்க வந்த அவரது தாயார் கணகம் மற்றும் அவரது மகன் பூவரசன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற கொலையாளிகள் வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதி முழுவதையும் ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்திற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ராமநாதபுரம் டிஐஜி துரை, சிவகங்கை பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த வீட்டிற்கு மூப்பனாய் ராம்போ வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக பிஐஜி துறை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் கண்ணங்கோட்டையில் வீட்டில் பெண் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சிவகங்கை பொறுப்பு) தங்கத்துரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது வீட்டில் திருடு போன பொருட்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது தேவகோட்டை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.