ஆப்நகரம்

தாய் கொலை- முன்னாள் அதிமுக எம்.பி. மகன் 3 மாதம் கழித்து டெல்லியில் கைது!

முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான பிரவீன், டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சாஸ்திரி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பலவேசம் தலைமையிலான தனிப்படையினர், இன்று பிற்பகலில் பிரவீனை கைது செய்தனர்

Samayam Tamil 29 Jul 2019, 6:45 pm
சென்னை பெசண்ட் நகரில், முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட வந்த மகன் மூன்று மாதங்களுக்கு பிறகு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான்.
Samayam Tamil தாய் கொலை- முன்னாள் அதிமுக எம்.பி. மகன் 3 மாதம் கழித்து டெல்லியில் கைது!
தாய் கொலை- முன்னாள் அதிமுக எம்.பி. மகன் 3 மாதம் கழித்து டெல்லியில் கைது!


திருச்செங்கோடு தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. குழந்தைவேலு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காலமானார். அதன்பின் அவரது மனைவி ரத்தினம் (63) சென்னை பெசன்ட் நகர் 6-ஆவது அவென்யூவில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி ரத்தினம் வீட்டில் மர்மமான கொலை செய்யப்பட்டு கிடந்தார். சொத்துப் பிரச்னையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் லண்டனிலிருந்து வந்திருந்த அவரது மகன் பிரவீண், தாய் ரத்தினத்தை கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, பிரவீனை தேடி வந்தனர். மேலும் பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவனது பாஸ்போர்டை முடக்கி இருந்தனர்.

மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் மகன் கைது!

இந்நிலையில், பிரவீன் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த பாலவாக்கம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்தியஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

கரூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொலை

இதனிடையே பிரவீனை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அப்போது தலைமறைவான பிரவீன், டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சாஸ்திரி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பலவேசம் தலைமையிலான தனிப்படையினர், இன்று பிற்பகலில் பிரவீனை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட பிரவீன், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாளை சென்னை அழைத்து வரப்படுவான் என்றும், பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி