ஆப்நகரம்

ஒற்றை தலைமை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு கொலை மிரட்டல் - டிஜிபியிடம் புகார்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக தமிழக டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jun 2022, 5:00 pm
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பாகியுள்ள நிலையில் , ஈபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசி வருகிறார். இது ஓபிஎஸ் தரப்பினரிடையே சலசலப்பை உண்டாகியுள்ளது. நடந்து முடிந்த பொது குழுவில் பேசிய சி.வி. சண்முகம், '' இரட்டை தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்து செயல்பட முடியாமல் உள்ளது.
Samayam Tamil eps ops


இரட்டைத் தலைமையால் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வு அடைந்துள்ளனர். நூறாண்டு காலம் அதிமுக நீடிக்க எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்ற ஒற்றைத்தலைமை எற்படுத்த வேண்டும். இப்பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுகிறது'' என விண்ணப்பத்தை வாசித்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வருவதற்காக தமிழக டிஜிபியிடம் சி.வி. சண்முகம் தரப்பு புகார் கொடுத்துள்ளது. நேற்று பிற்பகல் சி.வி. சண்முகத்துக்கு வாட்சப் மற்றும் அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக காவல் கட்டுப்பட்டு அரைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அக்காள் கணவனை குத்தி கொன்ற கோவக்கார மச்சான்கள்... என்ன நடந்தது..?

மேலும், விழுப்புரம் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழ டிஜிபியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி