ஆப்நகரம்

ராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து..! புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...

சேலம் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது லாரி மோதி விபத்து.

Samayam Tamil 27 Feb 2020, 12:48 pm
சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யன் துரை. இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அய்யன் துறையும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த விருத்தாசலத்தை சேர்ந்த ஸ்ரீதேவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை ஸ்ரீதேவியின் வீட்டார் ஏற்காததால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil சேலம் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி


இதையடுத்து அய்யன்துரையும், ஸ்ரீதேவியும் புதுப்பாளையத்தில் உள்ள சித்தர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் அங்கிருந்து இரு சக்கரவாகனத்தில் கோவைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது சங்ககிரி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் அய்யன்துரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

காதல் கணவன் கண் எதிரே பலியானதை பார்த்த ஸ்ரீதேவி படுகாயங்களுடன் கதறி அழுத நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீதேவியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த அய்யன்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.

பிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.!

முதற்கட்ட விசாரணையில் அய்யன்துரை சங்ககிரி சாலையின் இடது புறமாக சென்று கொண்டிருந்ததாகவும், அதே மார்க்கமாக பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஆயிரம் கனவுகளோடு அடியெடுத்து வைக்க நினைத்த இளஞ்சோடிகளின் பரிதாப நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி