ஆப்நகரம்

சிவகங்கை: பாஜக பிரமுகரால் கர்ப்பமான மாணவியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

சிவகங்கையில் நர்சிங் படித்து வந்த மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 1:43 pm
திருமணம் நடைபெறவுள்ள காரணத்திற்காக டி.சி. வாங்க வந்த மாணவியை மிரட்டி பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி முதல்வர் கைதாகிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil 1


சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த பவதாரணி (18) டி.சி. வாங்குவதற்காக கடந்த மாதம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி முதல்வரும் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவருமான சிவகுரு துரைராஜ், அந்த மாணவியை ஃபெயில் ஆக்கிவிடுவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தார்.

சென்னை: குழந்தை பாக்கியம் பெற செய்வினை நீக்க வந்த சாமியார்.. பணத்துடன் எஸ்கேப்!

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் உன் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பவதாரணிக்கும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் செப்டம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் இளம்பெண் சென்னையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் பாண்டியராஜ் பணியின் நிமித்தமாக வெளிநாட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டில் தங்கியிருந்த பவதாரணிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பரிசோதிக்க சிவகங்கையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை: சிறுமி ஆபாசப் படம்... இருவரிடம் சிபிஐ விசாரணை!

அங்கு அவர் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை அறிந்து அதிர்ச்சியான உறவினர்கள் இளம்பெண்ணிடம் விசாரித்ததில், அவரை கல்லூரி முதல்வரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி இளம்பெண்ணின் தயார், கல்லூரி முதல்வர் சிவகுரு துரைராஜ் மீது சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்று விசாரித்த போலீசார் சிவகுரு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் பாண்டியராஜ் பாதிக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாதென தெரிவித்துள்ளார். தனக்கு இந்த குழந்தை பிறந்தால் சமூகத்தில் என்னால் நிம்மதியாக வாழ முடியாதெனவும், கருணையின் அடிப்படையில் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் இளம்பெண் மனு ஒன்றை அளித்தார்.

வெளிநாட்டுப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சென்னை இளம் தொழிலதிபர் கைது!!

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எம். கோவிந்தராஜ், இளம்பெண்ணின் கருவை கலைக்கவும் மேலும் டி.என்.ஏ விவரங்களை சேகரித்து குற்றவாளியை தொடர்ந்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி