ஆப்நகரம்

அட்டாக் பாண்டி மனைவிக்கு இப்படியொரு பிரச்சனை- உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதால், அட்டாக் பாண்டிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2019, 10:27 am
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார். இவர் கடந்த திமுக ஆட்சியின் போது, வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார். 2007ஆம் ஆண்டில் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
Samayam Tamil Attack Pandi


இந்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தயாளு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: காதலை ஏற்க மறுத்த டீச்சர்; பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம் - சென்னை பயங்கரம்!

இதைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தனது கணவர் அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் அதிரவைக்கும் புதிய வீடியோ- அதிர்ச்சி தரும் உண்மை!

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க தற்போது இயலாது. அதேநேரத்தில் அவரது மனைவி தயாளுவுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் நாளன்று, அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பாகவும், பின்பாக சில மணி நேரமும் அட்டாக் பாண்டி தனது மனைவியுடன் மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்படுகிறது.

Also Read: மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு- நெஞ்சை உருக்கும் கடிதம்!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரும் வரையும், மீண்டும் சிறைக்கு திரும்பும் வரையிலும் உரிய போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி