ஆப்நகரம்

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உமாபதியின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 19 Feb 2020, 12:57 pm
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil Rape Case


இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது சிறையில் இருந்த பாபு என்பவர் உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் 16 பேரில் ஒருவரை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது.

எஞ்சிய 15 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..! கோர கொலையில் திடுக்கிடும் பின்னணி..

இந்நிலையில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 17வது குற்றவாளியான உமாபதி, தனது தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், நான் மின் பணியாளர்.

ஆனால் என்னை பிளம்பர் என்று போலீசார் தவறாக குறிப்பிட்டுள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆடையைக் கழற்றி 68 மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை, கல்லூரி முதல்வர் உள்படப் பலர் கைது!

எனவே என்னுடைய தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உமாபதியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி